/* */

திருவெண்ணைநல்லூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவெண்ணைநல்லூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது
X

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில் கரடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (வயது 21) குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த், ராஜசேகரன் மினி லாரியில் மணல் அள்ளிக்கொண்டு பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி கோவில் அருகே வந்தனர்.

அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட திருவெண்ணெய்நல்லூர் உதவி காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான காவல்துறையினர் சந்தேகப்படும் படி வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்ததில் திருட்டுத்தனமாக ஆற்றில் மணல் அள்ளியது தெரிய வந்தது.

உடனே திருட்டுத்தனமாக மணல் அள்ளி கொண்டு வந்த நெடுஞ்செழியனை கைது செய்து வழக்கு பதிவு செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய அரவிந்த் ராஜசேகரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 17 Sep 2022 4:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு