Begin typing your search above and press return to search.
கல்லூரி மாணவியை காணவில்லை: பெற்றோர் போலீசில் புகார்
Missing Cases - திருவெண்ணெய்நல்லூர் அருகே மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
Missing Cases - விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே டி. புதுப்பாளையம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். அவரது மகள் மகாலட்சுமி (வயது 19). திருக்கோவிலூர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தனர்.
பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகாலட்சுமி காணவில்லை. மகாலட்சுமி பெற்றோர் தனது மகளைபல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மகாலட்சுமி தந்தை அய்யப்பன் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2