/* */

திருவெண்ணெய் நல்லூர் அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

Lightning Strike Victims - திருவெண்ணெய் நல்லூர் அருகே டூவீலரில் வந்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருவெண்ணெய் நல்லூர் அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு
X

Lightning Strike Victims -திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள திருநாவலூர் ஒன்றியம் சீக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). விவசாயி. இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் (45) என்பவருடன் திருவெண்ணெய்நல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அவர்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு டி.கொளத்தூர் வழியாக மொபட்டில் ஊருக்கு புறப்பட்டனர்.

பூசாரிபாளையம் முனியப்பர் கோவில் அருகே சென்றபோது இடி. மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர்கள் 2 பேரும் மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பழனிவேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Sep 2022 10:23 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணும் பணிக்கான நடைமுறைகள்: கலெக்டர் தலைமையில் ஆலோசனை
  3. காஞ்சிபுரம்
    ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  4. ஈரோடு
    கோபியில் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்: மாட்டு வண்டி ஊர்வலத்துடன்...
  5. வீடியோ
    ஆட்டம் தமிழகத்திலிருந்து ஆரம்பம் | Annamalai-க்கு Amitshah ஆர்டர் |...
  6. ஆன்மீகம்
    உப்புத் தண்ணீரை மூதாட்டிமேல் கொட்டச் சொன்ன மகாபெரியவர்!
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் மாம்பழம் சாப்பிடலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குளித்த பிறகு தலை முடியை துவட்டாமல் விடுபவரா நீங்கள்?
  9. கோவை மாநகர்
    தண்ணீர் தொட்டிக்குள் மின்சாரம் தாக்கி இருவர் பலி
  10. தொழில்நுட்பம்
    ரியல்மி 13 ப்ரோ என்ன விலை?