Begin typing your search above and press return to search.
கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கிய அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைகடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழை அமைச்சர் பொன்முடி வழங்கினார்
HIGHLIGHTS
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி கூட்டுறவு வங்கியில் பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், சித்தலிங்கமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 பவுன் வரையிலான பொது நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி கலந்து கொண்டு இன்று (12.02.2022) பயனாளிகளுக்கு வழங்கினார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, இணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள்.யசோதா தேவி ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.