திண்டிவனம் நகராட்சி சேர்மன், துணை சேர்மன் பதவி ஏற்பு
திண்டிவனம் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவராக பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு எம்பி ரவிக்குமார் வாழ்த்து தெரிவித்த போது
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் நகராட்சியில் புதிதாக நகராட்சி சேர்மன், துணைச் சேர்மன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்கு கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இருபத்திரண்டாம் தேதி நடைபெற்றது அதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று திண்டிவனம் நகராட்சியை கைப்பற்றியது
சேர்மனாக திமுக நிர்மலா பதவி ஏற்றுக் கொண்டார், துணை தலைவராக விசிக ராஜலட்சுமி பதவி ஏற்றுக் கொண்டார், அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார், அப்போது திமுக, விசிக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu