/* */

திண்டிவனத்தில் நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நீதிமன்ற ஊழியர்கள் நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி செய்தனர்.

HIGHLIGHTS

திண்டிவனத்தில் நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் வல்லரசு(வயது 14). 10-ம் வகுப்பு மாணவனான இவன், நல்லாவூரில் இருந்து புதுகுப்பம் அரசு பள்ளிக்கு செல்ல அரசு பேருந்தில் பயணம் செய்தான். அப்போது டிரைவர் பிரேக் போட்டதால் வல்லரசு கீழே விழுந்து இறந்தான். இதில் பாதிக்கப்பட்ட பெற்றோர், நஷ்டஈடு கேட்டு திண்டிவனம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து, சிறுவனின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூ.11 லட்சத்து 63 ஆயிரத்து 932 வழங்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் நஷ்டஈடு தொகை வழங்காததால் நீதிபதி சுதா உத்தரவின்படி திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் வந்த அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Updated On: 5 Aug 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்