மேம்பால சுரங்க பாதையில் சிக்கிய அரசு பேருந்து

மேம்பால சுரங்க பாதையில் சிக்கிய அரசு பேருந்து
X

மழைநீரில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து

திண்டிவனம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சுரங்கபாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் அரசு பேருந்து சிக்கி கொண்டது.

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் பேருந்து நிலையத்திற்கு, மெயின் ரோட்டில் இருந்து பேருந்து செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தில் கீழ் சுரங்கப்பாதை உள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால், அப்பகுதியில் உள்ள கிடங்கல் ஏரி இருந்து வரும் தண்ணீர் சுரங்கப்பாதையில் தேங்கி நின்றது. இந்நிலையில் அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று தண்ணீரில் சிக்கி நின்றது. அதனால் பேருந்து பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture