விழுப்புரம் முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்

விழுப்புரம் முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்
X

கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரோசனை காவல் நிலையத்தில் இன்று சி.வி சண்முகம் புகார் அளித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகத்துக்கு செல்போனில் கொலை மிரட்டல்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், இவர் தற்போது திண்டிவனத்தில் வசித்து வருகிறார், இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவருக்கு தொடர்ந்து மர்ம நபர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தெரிகிறது. இது குறித்து தொலைபேசியில் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரோசனை காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.

Tags

Next Story
smart agriculture iot ai