/* */

உரத் தட்டுப்பாடு: அரசு நடவடிக்கை எடுக்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

உரத் தட்டுபாட்டை போக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக ராமதாஸ் அறிக்கையில் கேட்டுக் கொண்டு உள்ளார்.

HIGHLIGHTS

உரத்  தட்டுப்பாடு: அரசு நடவடிக்கை எடுக்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
X

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பாடு காரணமாக உரங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. உரத்தட்டுப்பாடு மற்றும் உர விலை உயர்வால் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

காவிரி பாசன மாவட்டங்களிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் குறுவை சாகுபடி நிறைவடைந்த, சம்பா நடவு தொடங்கியுள்ள நிலையில், உரத்தட்டுப்பாடு காரணமாக நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேரடி விதைப்பாக இருந்தாலும், நடவு நடும் முறையாக இருந்தாலும் அடியுரம் கண்டிப்பாகத் தேவை. அப்போது தான் நெற்பயிர்கள் நன்றாக வேர் பிடித்து, அதிக கிளை வைத்து செழித்து வளரும்.

ஆனால், டி.ஏ.பி. உரத்துக்கான மூலப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்து விட்டதாலும், அதற்கு இணையான அளவில் உர மானியத்தை உயர்த்தி வழங்க மத்திய அரசு மறுத்து விட்டதாலும் உர நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்து விட்டன. அதனால் சந்தையில் இந்த இரு வகை உரங்கள் கிடைக்கவில்லை. பல இடங்களில் யூரியா மூட்டைக்கு ரூ.100 வரையிலும், டி.ஏ.பி. மூட்டைக்கு ரூ.400 வரையிலும் விலை உயர்ந்துள்ளது. பல இடங்களில் நூண்ணூட்டச் சத்து உரங்கள், கலைக்கொல்லிகள் ஆகியவற்றை வாங்கினால் தான் இந்த இரு வகை உரங்களும் வழங்கப்படும் என்று உர வணிகர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் ஏழை விவசாயிகளால் சம்பா சாகுபடியை தொடங்க முடியவில்லை.

மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக காவிரியில் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், உரம் ஓரளவு தட்டுப்பாடின்றி கிடைத்ததாலும் குறுவை சாகுபடி வழக்கத்தை விட அதிக பரப்பளவில் செய்யப்பட்டு அதிக விளைச்சலும் எட்டப்பட்டுள்ளது. உழவர்களின் மனநிறைவும், மகிழ்ச்சியும் நீடிக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய உரங்களின் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்;

சம்பா சாகுபடி குருவை சாகுபடியை விட சுமார் 5 மடங்கு பரப்பளவில் செய்யப்படும். அதற்கேற்ற அளவில் உரங்களின் தேவை அதிகரிக்கும். யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய உரங்ளை அதிக அளவில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசுக்கு தமிழக வேளாண்துறை அமைச்சர் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அதற்கு இதுவரை எந்த பயனும் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் வேளாண்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் குழுவை தில்லிக்கு அனுப்பி தமிழகத்திற்கு தேவையான உரங்களை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன்மூலம் தமிழகத்தில் உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உர விற்பனையை முறைப்படுத்த வேண்டும். யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய இரு உரங்களையும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களை கூடுதல் விலைக்கு யார் விற்பனை செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டு கொண்டு உள்ளார்.

Updated On: 7 Oct 2021 3:47 PM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு