/* */

திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது

Crime Punishment- திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த ஒருவரை போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட வெங்கடேசன்.

Crime Punishment- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் பிரம்மதேசம் போலீசார் திண்டிவனம் அருகே உள்ள மன்னார்சாமி கோவில் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது அங்குள்ள டீ கடையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக தகவல் சொன்னதால் அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் சென்னை அசோக்நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன் என்கிற கலச வெங்டேசன்(வயது 36) என்பதும் கடந்த 2021-2022-ம் ஆண்டுகளில் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.8.75 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 July 2022 10:43 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...