/* */

திண்டிவனம் அருகே ஆசிரியர் வீட்டில் 40 பவுன் திருட்டு

திண்டிவனம் அருகே உள்ள பலாகுப்பத்தில் ஆசிரியர் வீட்டில் பட்டப் பகலில் 40 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்

HIGHLIGHTS

திண்டிவனம் அருகே ஆசிரியர் வீட்டில் 40 பவுன் திருட்டு
X

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஆசிரியர் தம்பதி வீட்டில் 40 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பெலாக்குப்பம் ரோட்டில் சாய் லட்சுமி நகரில் வசித்து வருபவர் சசிவிகுமார் (வயது 47). இவரது மனைவி லதா (40). இதில், சசிவிகுமார் கருவம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியிலும், லதா விழுக்கம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியிலும் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று வழக்கம் போல் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டனர்.

பள்ளி நேரம் முடிந்த பின், மாலை 5 மணிக்கு லதா தனது வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. 40 பவுன் கொள்ளை மேலும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 40 பவுன் நகைகள், ரூ.7 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. கொள்ளை போன 40 பவுன் நகையில், வங்கியில் அடகு வைத்திருந்த 12 பவுன் நகையை நேற்று முன்தினம் தான், சசிவிகுமார் திருப்பி கொண்டு வந்து, வீட்டில் வைத்திருந்தார். மொத்த நகைகளையும் வங்கியில் உள்ள லாக்கரில் வைக்க முடிவு செய்து இருந்தார். அதற்குள் இந்த கொள்ளை சம்பவம் அறங்கேறிவிட்டது.

இதுபற்றி அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சீனிபாபு, புகழேந்தி மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவுக்கான வயர்களை துண்டித்தும், வீடியோ பதிவாகி இருந்த ஹார்டுடிஸ்கை கொள்ளையர்கள் திருடி சென்று இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து கைரேகை நிபுணர் கூடுதல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் நேரில் வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தார். மேலும் மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த ராக்கி வீட்டிலிருந்து பின்பக்கமாக ஓடி சென்று நின்றது. இதுகுறித்து ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 3 Sep 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...