/* */

தொடர் கனமழை: விழுப்புரம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொடர் கன மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளதால் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தொடர் கனமழை: விழுப்புரம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

விழுப்புரம் மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் அப்பகுதியில் பொழியும் மழையால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் உச்ச நீர்மட்டமான 119 அடியில் 117 அடியை தண்ணீர் எட்டியுள்ளதை அடுத்து, அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் விழுப்புரம் மாவட்டம் வழியாக ஓடும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 7200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அதனால் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் மலட்டாறில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், விழுப்புரம் அருகே பில்லூரில் இருந்து சேர்ந்தனூருக்கு செல்லும் விதமாக மலட்டாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம், பரசுரெட்டிபாளைய தரைப்பாலம் ஆகியன தண்ணீரில் மூழ்கி உள்ளது.


முன்னதாக மாரங்கியூர்-ஏனாதிமங்கல் இடையிலான தரை பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, அதனால் 2 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் செல்வதால், போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால், 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அத்தியாவசிய தேவைக்காகவும், வேலைக்கு செல்லவும் சுமார் 10 கி.மீ. தூரம் சுற்றி விழுப்புரம் வந்து அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்கள். தரைப்பாலம் பகுதியில் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 31 Aug 2022 6:09 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு