/* */

மயிலம் அருகே தெருக்களில் குட்டை பாேல் தேங்கிய மழைநீரால் பாெதுமக்கள் அவதி

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

மயிலம் அருகே தெருக்களில் குட்டை பாேல் தேங்கிய மழைநீரால் பாெதுமக்கள் அவதி
X

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட கூட்டேரிப்பட்டு ஊராட்சியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் உள்ள தெருக்களில் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கின்றன.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட கூட்டேரிப்பட்டு ஊராட்சியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் உள்ள தெருக்களில், வெள்ளிக்கிழமை இரவு பெய்த சாதாரண கனமழைக்கே மழைநீர் வெளியேற வழியின்றி தெருக்களில் குட்டை போல் தேங்கி நிற்கின்றன.

இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த தெருவில் குட்டை பாேல் தேங்கியுள்ள நீரில் நீந்தி தான் தங்கள் குடியிருப்புகளுக்கு செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியுள்ளதால், அப்போது பெய்யும் அதிகப்படியான கனமழையால் ஏற்படும் மழைநீர் குடியிருப்புகளை சூழ்வதற்குள் ஊராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து மழை தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 Aug 2021 10:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!