/* */

விழுப்புரம் அருகே 30 ஏக்கர் தைல மரங்கள் எரிந்து நாசம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வீடுர் அணை அருகே 30 ஏக்கர் அளவில் தைல மரங்கள் எரிந்து நாசமாகின.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே 30 ஏக்கர் தைல மரங்கள் எரிந்து நாசம்
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ளது வீடூர் அணை.இதன் மேற்கு பகுதியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் தைலமரக்காடு உள்ளது. இதனை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு தைலமரக்காட்டில் உள்ள மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது பற்றிய தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையிலான வீரர்கள் விஜயகுமார், வீராசாமி, மகேஷ் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று தண்ணிரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் மரங்கள் அடர்த்தியாக இருந்ததால் தீ அனைத்து மரங்களுக்கும் பரவியது, இதனால் சுமார் 30 அடி உயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

மேலும் காற்றும் அதிகமாக வீசியதால், தீயணைப்பு வீரர்களால் விரைந்து தீயை அணைக்க முடியவில்லை. இந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு சாரல் மழை பெய்தது. இதனால் தீயின் தாக்கம் குறைய தொடங்கியது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இரவு 9.30 மணிக்கு மேலாகவும் ஈடுபட்டு வந்தனர்.

இந்த தீவிபத்தில் 60 ஏக்கர் பரப்பிலான தைல மர வனப்பகுதியில் சுமார் 30 ஏக்கரில் இருந்த தைல மரங்கள் இன்று காலை வரை முற்றிலும் எரிந்து நாசமாகியது, இதன் மதிப்பு ரூ.5 லட்சம் வரை இருக்கும் என தெரிகின்றது.அப்பகுதியில் சிறிய சாரல் மழை பெய்ததால் தீ மேலும் 30 ஏக்கரில் பரவாமல் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 July 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  7. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  8. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  9. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  10. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு