செஞ்சி பேரூராட்சியில் உறுப்பினர்கள் பதவி ஏற்பு

செஞ்சி பேரூராட்சியில் உறுப்பினர்கள் பதவி ஏற்பு
X

செஞ்சி பேரூராட்சியில் வார்டு  உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர் 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் செஞ்சி பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் திமுக சார்பில் 17 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஒரு வார்டில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது,.

வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ராமலிங்கம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வெற்றி பெற்ற உறுப்பினர்கள் உறுதி மொழி ஏற்று பேரூராட்சி உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அமைச்சர் மஸ்தான் வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?