/* */

செஞ்சி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

செஞ்சி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு
X

சாலை விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா கீரம் பாடி பகுதியைச் சேர்ந்தவர் முத்து ராஜேந்திரன் (வயது ௬௦). இவருடைய தந்தை முத்துப்பாண்டியன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மதுரையில் இறந்து விட்டார் நேற்று அவருக்கு முப்பதாம் நாள் துக்க நிகழ்ச்சி அனுஷ்டிக்கப்பட்டது,

அந்நிகழ்ச்சியில் முத்து ராஜேந்திரன், அவரது மனைவி சாந்தி, மகன் அழகுவேல் ராஜா மற்றும் மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி சகுந்தலா தேவி ஆகியோர் பங்கேற்று விட்டு நேற்று இரவு காரில் மதுரையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் மாவட்டம் வளத்தி - அருள் நாடு கல்லறை அருகே அதிகாலை 3 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது, கார் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் அவருடைய மனைவிசாந்தி மற்றும் அவரது மகன் அழகு ராஜா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும் மதுரையைச் சேர்ந்த சகுந்தலா தேவி பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் மேல் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அறிந்த செஞ்சி டி.எஸ்.பி .பிரியதர்ஷினி தலைமையில் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிர் இழந்த உடல்களை கைப்பற்றி உடற்கூறுஆய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வளத்தி போலீசார் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கொத்தம் வாடியை சேர்ந்த லாரி டிரைவர் சுந்தர் (வயது 28) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 30 Aug 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  3. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  6. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு