/* */

செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட மாநாடு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்ட மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட மாநாடு
X

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செஞ்சி வட்டக்குழு சார்பில் மாநாடு நடைபெற்றது, மாநாட்டிற்கு வட்டத் தலைவர் கோ.மாதவன் தலைமை தாங்கினார், குண்டு ரெட்டியார் சங்க கொடி ஏற்றி வைத்தார். எம்.மேகராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார், வட்ட செயலாளர் வி.சிவன் வேலை அறிக்கையை வசித்தார்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வேல்மாறன், கட்சி வட்ட செயலாளர் சகாதேவன், விதொச மேல்மலையனூர் வட்ட செயலாளர் எழில் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி பேசினர்.மாநாட்டில் சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கி முறைகேட்டில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வட்டியுடன் அவர்கள் முதலீட்டு பணத்தை திருப்பி தரவேண்டும்,செம்மேடு ராஜஸ்ரீ சக்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

மாநாட்டில் புதிய செஞ்சி வட்டத் தலைவராக கோ.மாதவன், வட்ட செயலாளராக வி.சிவன், வட்ட பொருளாளராக ஜி.சபாபதி ஆகியோர் உட்பட 21 பேர் கொண்ட புதிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செஞ்சி வட்டக் குழு தேர்வு செய்யப்பட்டனர்

Updated On: 7 Aug 2022 2:56 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  6. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  7. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  10. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...