/* */

செஞ்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

செஞ்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

செஞ்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

செஞ்சியில் கர்நாடக பாஜக அரசை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்த கல்லூரி நிர்வாகம் மற்றும் கர்நாடக பாஜக அரசை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகங்களையும், கர்நாடக பாஜக அரசையும் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் மாதர் சங்க வட்ட தலைவர் கே.அமலா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் விக்கிரவாண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி,மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.கீதா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் கே.மாதவன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் எஸ.சையத் உஸ்மான், மாதர் சங்கவட்ட செயலாளர் ஆர்.பிரியா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்பாட்டத்தில் பழங்குடி மக்கள் பாதுகாப்பு சங்க டபில்யு.ஆல்பர்ட் வேளாங்கண்ணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் வி.சிவன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ஆர்.குண்டு ரெட்டியார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க டி.அரவிந்த் உட்பட ஏராளமான பெண்களும், இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இறுதியாக ஜனநாயக மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் வி.சங்கீதா நன்றி கூறினார்.

Updated On: 25 Feb 2022 2:55 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி