/* */

சுற்றுலாதலம் ஆக்கப்படுமா செஞ்சி கோட்டை?

செஞ்சி பகுதியில் அமைந்துள்ள செஞ்சிக்கோட்டையை சுற்றுலாத்தலம் ஆக்க வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது

HIGHLIGHTS

சுற்றுலாதலம் ஆக்கப்படுமா செஞ்சி கோட்டை?
X

செஞ்சி கோட்டை 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள ராஜா தேசிங்கு கோட்டையை சுற்றுலா மையமாக மாற்றவேண்டும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்து வருகின்றது.

தமிழகத்தின் கலைத்திறன் மிக்க கோட்டையாக விளங்குவது செஞ்சிக்கோட்டை ஆகும். பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்கு இணையாக செஞ்சிக்கோட்டை விளங்கி வருகிறது. கடந்த 9-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவின் பெரிய நகரங்களில் ஒன்றாக இருந்த செஞ்சியை தலைமையிடமாக கொண்டு கோனார் வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தனர்.

இதையடுத்து கடந்த 12-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆனந்த கோனார் இயற்கை எழிலும், நீர் வளமும் நிறைந்த 3 மலைகளையும், 2 சிறிய குன்றுகளையும் இணைத்து செஞ்சி கோட்டையை கட்டினார். கோனார் வம்சத்தினரும் அடுத்து வந்த விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் கோட்டையின் பராமரிப்பை செய்தனர்.

கோட்டையை சுற்றி பெரிய சுற்று மதில்களையும், அதை சுற்றி நீர் நிரம்பிய அகழிகளையும் அமைத்து வலுவான கோட்டையாக மாற்றினர். இங்கு வந்து ஆண்டு கணக்கில் போர் புரிந்தாலும், கோட்டையை முற்றுகையிட்டாலும் உள்ளே இருந்தே போர் புரியும் வகையில் இடம் மற்றும் போர்க்கருவிகள் தயாரிக்கும் வசதிகள் உள்ளிட்டவை சிறந்த கட்டிடக்கலை நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.


இது தவிர மூலிகை காடுகள், வற்றாத நீர் நிலைகள், விவசாயம் செய்ய பெரும் நிலப்பரப்பு உள்ளிட்டவையும் உள்ளது. மேலும் கோட்டைக்குள் கலைநயம் மிக்க கல்யாண மஹால், குதிரைலாயம், தர்பார்மண்டபம், அரண்மனை பகுதி, வெங்கட்ரமணர் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில் என நாம் கற்பனையில் நினைத்து பார்க்க முடியாத வகையில், கோட்டைக்குள் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அவற்றை முழுமையாக பெற்றுள்ளதே செஞ்சிக்கோட்டையின் சிறப்பம்சமாகும். பல்வேறு மன்னர்களால் பலப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு இயற்கை சீற்றங்களையும் கடந்து இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய கற்க்கோட்டைகளில் ஒன்றாக செஞ்சி கோட்டை விளங்குவது சிறப்பம்சமாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவில் அதிகமாக கண்டு களித்த இடங்களில் 4-வது இடத்தை பிடித்தது செஞ்சிக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பெருமையை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவும், செஞ்சி கோட்டையை அழியாமல் காக்கவும் செஞ்சி கோட்டையை சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இது வரை எந்த பலனும் கிடைக்கவில்லை.

கடந்த 1970-ம் ஆண்டில் இருந்து இங்கு வரும் அரசியல் கட்சியினர் பலரும் செஞ்சி கோட்டையை சுற்றுலா தளமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் தங்களது வாக்குறுதிகளை இது வரை நிறைவேற்றவில்லை.

இருப்பினும் செஞ்சிக்கோட்டை மத்திய தொல்லியல் துறை சார்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இருந்தது இருந்தபடியே என்ற நிலையில் கோட்டையை பாதுகாத்து வருகின்றனர். ஆனால் கோட்டையை சுற்றி பார்க்க வரும் மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மந்திரியாக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் செஞ்சி கோட்டைக்கு ரோப் கார் விடுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அதுவும் நடைபெறாமல் நின்றுவிட்டது. தமிழக அரசால் சுற்றுலா மையமாக அறிவித்தாலே அடுத்தடுத்து சுற்றுலா மையத்திற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு அங்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.

Updated On: 15 Dec 2022 10:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...