செஞ்சி அருகே விபத்துக்குள்ளான அரசு பேருந்து: டிரைவர் பலி

செஞ்சி அருகே விபத்துக்குள்ளான அரசு பேருந்து: டிரைவர் பலி

பைல் படம்.

Bus Accident News - செஞ்சி அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் டிரைவர் பலியானார். கண்டக்டர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

Bus Accident News -சென்னையில் இருந்து அரசு பேருந்து பயணிகளுடன் இரவு திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டது. பேருந்தை செஞ்சி கட்டபொம்மன் தெருவை சேர்ந்த விநாயகம் (வயது 55) என்பவர் ஓட்டிச் சென்றார். பேருந்து விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கோட்டை வனச்சரக அலுவலகம் அருகே சென்றபோது, திடீரென ஆக்சிலேட்டர் உடைந்து போனது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடியபடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விநாயகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பேருந்து கண்டக்டர் கிருபாகரன் (50) மற்றும் 3 பயணிகள் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே விபத்துக்குள்ளான அரசு பேருந்து அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story