செஞ்சி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த பாஜக தீர்மானம்

செஞ்சி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த பாஜக தீர்மானம்
X

விழுப்புரம் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஏ.டி.ராஜேந்திரன் தலைமையில் செஞ்சியில் நடைபெற்றது. 

செஞ்சியில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் செஞ்சி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

விழுப்புரம் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஏ.டி.ராஜேந்திரன் தலைமையில் செஞ்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில சிறுபான்மையினா் அணித் தலைவா் டெய்சிசரன், மாநில அலுவலக செயலா் சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

கூட்டத்தில் செஞ்சி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும். மாவட்டத்தில் மலா் சாகுபடிக்காக குளிா் பதனக் கிடங்கு அமைக்க வேண்டும். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை விழுப்புரம் மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றினர்.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் சிவதியாகராஜன், மாவட்ட பொதுச் செயலா்கள் கே.பாண்டியன், ராமஜெயக்குமாா், சத்தியநாராயணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.முடிவில் செஞ்சி நகரத் தலைவா் தங்க.ராமு நன்றி கூறினார்.

Tags

Next Story
ai solutions for small business