அமைச்சர் தொகுதியிலேயே அடிக்கடி கரெண்ட் கட்

X
செஞ்சி கோட்டை
By - P.Ponnusamy, Reporter |8 July 2021 8:30 PM IST
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விழுப்புரம் வந்திருந்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது என கூறி சென்றார், அவர் அப்படி கூறி சென்ற சில நாட்களிலேயே செஞ்சி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது, அப்படி என்றால் அமைச்சர் வார்த்தையை செஞ்சி பகுதி மின்சார வாரியம் மதிக்கவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
செஞ்சி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu