சீரான வேகத்தில் இறப்பு விகிதம்

சீரான வேகத்தில் இறப்பு விகிதம்
X
விழுப்புரம் மாவட்டத்தில் சீரான வேகத்தில் இறப்பு விகிதம் ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கட்கிழமை 197 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 17,680 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை119 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

திங்கட்கிழமை மட்டும் 133 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 16,353 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 1208 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இறப்பு விகிதம் சீரான வேகத்தில் இருப்பதால் மக்களிடையே ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பாதிப்பு : 197

இன்று குணமடைந்தோர் : 133

மொத்த பாதிப்பு : 17680

மொத்த குணமடைந்தோர்: 16353

சிகிச்சையில் : 1208

இன்றைய இறப்பு : 1

மொத்த இறப்பு : 119

Tags

Next Story