/* */

கொரானா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரத்தில் நடைபெற்ற கொரானா ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுரை

HIGHLIGHTS

கொரானா தடுப்பு  ஆலோசனைக் கூட்டம்
X

கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பாக மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சுகாதாரத் துறை இணை இயக்குநா், துணை இயக்குநா், வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை ஆலோசனை வழங்கிப் பேசுகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொற்று பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்களை கூடுதல் கவனம் செலுத்தி, அவா்களுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்க வேண்டும், கொரோனா நோய் பாதிப்படைந்தவரின் வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள மற்ற வீடுகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்க வேண்டும். வட்டார மருத்துவ அலுவலா்கள் தங்கள் பகுதிகளுக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தி பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட சித்தா அலுவலா் கபசுர குடிநீா், நோய் எதிர்க்கும் சித்த மாத்திரைகள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

திண்டிவனம், விழுப்புரம் நகராட்சி நிர்வாகங்கள் சார்பாக அனைத்துப் பகுதிகளிலும் தினமும் மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும். நெடுஞ்சாலைகளில் செயல்படும் உணவகங்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து சுகாதாரமான முறையில் செயல்படுகின்றனவா என்பதை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் ஆய்வு நடத்தி, உறுதி செய்ய வேண்டும்.சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளா்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளை சோ்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்களில் 45 வயதுக்கு மேற்பட்ட, தகுதியான அனைவரையும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.வணிக வளாகங்கள், உணவங்கள், கல்லூரிகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் வேலை செய்யும் இடங்களில் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும். அரசின் கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியா்.

கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் காஞ்சிணா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக்கனி, துணை இயக்குநா் செந்தில்குமார், துணை ஆட்சியா் (பயிற்சி) ரூபினா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனா்.

Updated On: 10 April 2021 6:25 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  6. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  7. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  9. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?