சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் கலெக்டர் மோகன்.
சிறுபான்மையினன மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழகத்தைச் சோ்ந்த சிறுபான்மையினரான இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த ஒன்று வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், அதற்கு மேல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பயில்வோருக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மத்திய அரசு சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் இந்த கல்வியாண்டில் (2021 - 22) பயிலும் சிறுபான்மையினத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். ஐடிஐ, பாலிடெக்னிக், கல்வியியல் கல்வி, செவிலியா் பட்டயப்படிப்பு உள்ளிட்ட படிப்புகள் பயில்வோரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu