/* */

கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கிய 5ம் வகுப்பு மாணவி

விழுப்புரம் மாவட்டத்தில் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, முதல்வரின் கொரோனா நிதிக்கு உண்டியல் பணத்தை அனுப்பி வைத்தார்.

HIGHLIGHTS

கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கிய 5ம் வகுப்பு மாணவி
X

கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கிய 5ம் வகுப்பு மாணவி

விழுப்புரம் அருகே உள்ள அனிச்சம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கதனேசன்- தமிழ்செல்வி தம்பதியரின் மகள் சிந்துஜா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மடிக்கணினி வாங்க, உண்டியலில் பணம் சேர்த்து வந்தார்.

சமீபத்தில் தான் படித்து வரும் பள்ளியில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் சிந்துஜா கலந்து கொண்டு 2-வது பரிசாக ரூ.500 பெற்றார். அதையும் உண்டியலில் போட்டார்.தற்போது கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருவதால் நோய் பாதிப்புகள் குைறய தமிழக முதல்-அமைச்சருக்கு பல தரப்பினரும் நிவாரணம் அளித்து வருகிறார்கள்.

எனவே தான் ஆசையாக மடிக்கணினி வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார்.இதைக்கேட்டு ஆச்சரியம் அடைந்த கதனேசன், உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.1,500-ஐ வங்கியில் கொடுத்து வரைவோலையாக எடுத்தார். பின்னர் அதனை முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக நேற்று மாணவி சிந்துஜா அனுப்பி வைத்தார். மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 12 May 2021 10:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  5. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  9. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  10. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!