வாக்குச்சாவடிகளில் கொரானா முன்னெச்சரிக்கை
வாக்குச்சாவடிகளில் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை ஏற்று ப விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 2ஆயிரத்து 368 வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வாக்களிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாக்குச்சாவடி மையங்களில் கை கழுவும் திரவம், உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி பயன்படுத்தப்படவுள்ளது. அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்கும் பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சுகாதாரத் துறை சாா்பாக மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் கரைசல், நோய் எதிா்ப்பு சத்து மாத்திரைகள் வழங்க வேண்டும்.
பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். தோ்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்தப் பணிகளை சுகாதாரத் துறை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பாக அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணியவும் தொடா்ந்து வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் சுகாதார நல இணை இயக்குநா் சண்முகக்கனி, துணை இயக்குநா் செந்தில்குமாா், வருவாய்த்துறை, பேரூராட்சி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயல் அலுவலா்கள் பங்கேற்றனா்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu