velu nachiyar in tamil-என் கணவனையா கொன்றாய்..? உயிரோடு உன்னை விடமாட்டேன்..! முழங்கிய வீரப்பெண்மணி வேலுநாச்சியார்..! வரலாறு அறிவோம்..!

velu nachiyar in tamil-வீரமங்கை வேலுநாச்சியார்.(கோப்பு படம்)
வேலுநாச்சியார் வீர வரலாறு
velu nachiyar in tamil-ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் ஆவார். இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளைய கும்பினி அரசை எதிர்த்து போரிட்ட முதல் பெண்மணி என்று ஜான்சிராணியையே இன்று வரை சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். இந்திய சுதந்திர வரலாறுகளை பெரும்பாலும் வடநாட்டுக்காரர்களே எழுதி வந்ததால், அவர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தை முதன் முதலில் எதிர்த்த பெண்மணியாக ஜான்சிராணியையே குறிப்பிட்டு வருகிறார்கள்.
எந்த அடிப்படையில் அப்படி சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. 1857- சிப்பாய் கலகம்தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட முதல் குரல் என்கிறார்கள். இதைத் தான் நாமும் படித்து வருகிறோம். இந்தியாவின் முதல் சுதந்திரக் குரல் பூலித்தேவனின் குரலே. இவருக்கு பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்த கம்பீரக்குரல் வீரமங்கை வேலு நாச்சியாரின் குரலே.
ஜான்சிராணி பிறந்தது 1830. இவருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் வேலுநாச்சியார். ஆம், இவர் பிறந்த வருடம் 1730ம் ஆண்டில் பிறந்தவர்.ஜான்சிராணிக்கு முன்னர் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வேலுநாச்சியார்தான் என்பது இதிலேயே புரிகிறது அல்லவா..?
velu nachiyar in tamil
சுதந்திரப் போராட்டம் என்பதே வடக்கிலிருந்து தொடங்கியதை போன்ற தோற்றத்தை உருவாக்கியதால் தென்னாட்டவர்களின் போராட்டங்கள் வெளியே தெரியாமல் போய் விட்டன.மதுரை நாயக்கர்கள் தங்களின் நிலப்பரப்பை ஆளமுடியாததால் பல பாளையங்களை உருவாக்கினார்கள். அந்த பாளையங்களை ஆள்பவர்கள் பாளையக்காரர்கள் என அழைக்கப்பட்டனர்.
பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தை வீரபாண்டிய கட்டபொம்மு, ஆண்டதைப் போல சிவகங்கை சீமையை கச்வாண பெரிய உடையாத் தேவர் ஆண்டார்.அப்போது ராமநாதபுரத்தை சேதுபதிகள் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி செய்து வந்தனர். கிழவன் சேதுபத் (1674-1710) சோழபுரத்துக்கு அருகல் நாலு கோட்டை என்ற பெயரில் கோட்டையை கட்டி தமக்கென்று ஒரு செல்வாக்கு உருவாக்கிக் கொண்டார் அன்று முதல் பெரிய உடையாத்தேவரை பாளையக்காரர் ஆக்கினார்.
உடையார் தேவரின் கீழ் 300 படை வீரர்களை கொடுத்து அவர்களை பராமரிக்க சில கிராமங்களை வழங்கினார். கிழவன் சேதுபதி மறைவுக்கு பின் திரு உடையாத் தேவர் என்ற விஜயரகுநாத சேதுபதியானார். இவர் தனது மகள் அகிலாண்டேஸ்வரியை உடையாத் தேவரின் மகனான சச்வர்ணத் தேவருக்கு திருமணம் செய்து வைத்தார். சசிவர்ணத் தேவன் நல்ல ஆற்றல் பெற்றவராகவும், மதிநுட்பம் மிக்கவராகவும் விளங்கினார். வாட்போர், விற்போர் போன்றவைகளில் சிறந்து விளங்கினார்.
கம்பீரமான தோற்றமுள்ளவராக திகழ்ந்தார். இவருக்குக்குப் பவனம், திருப்பத்தூர், பிராமன்கனை, சோடியாம் என்ற நான்கு கோட்டைகளை தனது மருமகனுக்கு திருஉடையாத் தேவர் வழங்கினார்.சசிவர்ண தேவரின் சிவகங்கை சீமை 2000 சதுர மைல்களைக் கொண்டது.இவருக்கு முத்து வடுக நாதர் மகனாய் பிறந்தார். இவர் 1742-ல் சிவகங்கையின் மன்னராக்கப்பட்டார்.
velu nachiyar in tamil
வேலுநாச்சியார் பிறந்தநாள்
வேலு நாச்சியார்,இராமநாதபுர சேதுபதியான செல்லமுத்து தேவருக்கும், 'சத்தந்தி' முத்தாத்தாள் நாச்சியருக்கும் 1730ம் ஆண்டுபிறந்தார். அக்குழந்தைக்கு வேலுநாச்சியார் என பெற்றோர் பெயரிட்டனர். அரசுரிமைக்கு ஆண் வாரிசைதான் அரசர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால் பிறந்தது பெண் குழந்தை.பெண் குழந்தை பிறந்து விட்டதே என செல்லமுத்து தேவர் மனம் வருந்தவில்லை. மாறாக, வளரும் மகளுக்கு குதிரை ஏற்றம், வாள் வீச்சு, சிலம்பம், வளரி என்ற ஆயுதத்தை கையாளல் போன்ற போர்க்கள பயிற்சிகளை கற்றுக் கொடுத்தார்.
வேலுநாச்சியாரும் பயிற்சிகளை மிகவும் கவனத்துடன் கற்றுக் கொண்டார். பயிற்சி பெறுகின்ற போதே ஒருவருக்கு ஒருவர் என்பதை போல வாள் பயிற்சியை கற்றுக் கொள்ளாமல், தன்னை சுற்றி பத்து பேரை நிற்க வைத்து கடுமையாக பயிற்சி பெற்றார். மகளுக்கு தாய்மொழி தமிழை மட்டும் சொல்லி கொடுக்காமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம் என ஆறு மொழிகளையும் சொல்லிக் கொடுத்து, பன்மொழி புலமையாளராகவும் திறமை பெற வைத்தார் செல்லமுத்து தேவர்.
வேலுநாச்சியார் திருமணம்
செல்லமுத்து தேவர், தன் மகள் திருமண வயதிற்கு மேலான வயதை பெற்று நிற்பதை கண்டார். அப்போதெல்லாம் 12, 13 வயதில் திருமணம் செய்து விடுவது வழக்கம். தன் மகளுக்கு நல்ல மாப்பிள்ளையை பாளையத் தாரிடையே பார்த்தார். தன் மகளுக்கு இணையான வீரராய் மருமகன் இருக்க வேண்டும் என விரும்பினார்.
velu nachiyar in tamil
சிவகங்கை சீமையை ஆளும் முத்துவடுக நாதரே தன் மகளுக்கு ஏற்ற மணாளன் என்பதை உணர்ந்து அவருக்கே 1746ம் ஆண்டில் திருமணம் முடித்து வைத்தார். அவருக்கு வேலுநாச்சியாரின் போர்க்கள செயல்கள் பிடித்திருந்தது. அவரின் கீழ் இரண்டாயிரம் படை வீரர்களை பிரித்துக் கொடுத்தார். 16 வயதிலேயே வேலுநாச்சியார் ஒரு படைக்கு தளபதியாக திகழ்ந்தார். இவருக்கு பின் கௌரி நாச்சியாரை 2-வதாக மணந்தார் முத்துவடுக நாதர்.
வேலுநாச்சியார் கணவர் வீர மரணம்
முத்துவடுக நாதர் சிவகங்கை சீமையை நல்லபடியே ஆட்சி செய்து கொண்டிருந்தார். விவசாயம், நிர்வாகம் சிறந்த முறையில் நடந்து கொண்டிருந்தது. அவர் நேரடியாக தனது எல்லைக் குட்பட்ட கிராமங்களுக்கு செல்வார். விவசாய பணிகளை கவனிப்பார். இவருக்கு உதவியாக மந்திரி தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் ஆகியோர் இருந்தனர்.
சிவகங்கை சீமை செழிப்புடன் இருப்பதை அறிந்தான் ஆற்காடு நவாப் முகம்மது அலி. முகம்மது அலி சிறு படையை சிவகங்கை சீமைக்கு அனுப்பி வைத்தான். படைத்தலைவர் முத்துவடுக நாதரை சந்தித்து, நவாப், கப்பம் தொகை கேட்டதாக சொல்ல "கப்பமா? யார் யாருக்கு கட்ட வேண்டும்?" என்று கேட்டார் அரசர்.
"நவாப்பின் அடிமைகள் நீங்கள். ஆம். பாளையங்களை ஆளும் பாளையக்காரர்கள் அனைவரும், நவாபுக்கு கப்பம் கட்ட வேண்டும்.' என்றார் தளபதி.
"நவாபுக்கு கப்பம் கட்ட வேண்டும் என்பது எந்த சட்டத்திலும் சொல்லவில்லையே தளபதி?"
"நீங்க நவாப்பை இழிவு படுத்துகிறீர்கள்?"
"முதலில் அவர் யார்? எங்கள் தேசத்துக்கு மன்னரா? சல்லிகாசு கூட கப்பம் என்ற பெயரில் கொடுக்க மாட்டேன் போய் விடுங்கள்" என்றார் முத்து வடுக நாதர். படைத்தளபதி வந்த பத்தாவது நாளில் முகம்மது அலியிடமிருந்து கடிதம் வந்தது.
velu nachiyar in tamil
'பாளையக்காரர்களில் நீங்களும் பூலித்தேவனும் தான் கப்பம் கட்ட மறுக்கிறீர்கள். கப்பம் கட்டாத பூலித்தேவனும் நாட்டை விட்டே துரத்தியதை அறிவீர்கள் அல்லவா? உடனே கப்பம் கட்டுங்கள். இல்லையெனில் சிவகங்கையை நீங்கள் ஆள முடியாது எண்டு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.கடிதத்தை படித்ததும் கோபம் எழுந்தது முத்து வடுக நாதருக்கு 'கப்பம், கப்பம், கப்பம்' இதை கேட்கும் உரிமை நவாப்புக்கு யார் கொடுத்தது? குமுறிய அவர் தைரிய மிருந்தால் நேருக்கு நேர் மோதட்டும்.
தாண்டவராய் பிள்ளை, மருது சகோதரர்களை அழைத்த முத்து வடுக நாதர், படைகளை தயாராக வைத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.அப்போது வேலுநாச்சியாருக்கு பிறந்த மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் கொல்லங்குடியில் தங்கியிருந்தார். 1772ம் ஆண்டு ஜனவரி வாக்கில் ஆற்காடு நவாப் கும்பினி படையோடு சிவகங்கை மீது போர் தொடுத்தான்.
முத்துவடுக நாதர் தம் படையினரோடு நவாப் படையை எதிர்த்தார். மருது சகோதரர்கள் ஒரு பக்கம் கும்பினி படையை தாக்க கடும் போர் நிகழ்ந்தது. வடுக நாதரின் வாள் சுழற்சிக்கு முன்பாக நவாப் படையினரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. பெருத்த இழப்புகளோடு பின் வாங்கி ஓடினர், நவாப் மற்றும் கும்பினி படையினர். சிவகங்கை மக்கள் வெற்றி விழா கொண்டாடினர்.
அடிப்பட்ட நவாப் மறுபடியும் தன்னை சீண்டாமல் இருக்க மாட்டான் என்பதை உணர்ந்த முத்து வடுக நாதர் படையை பெருக்கவும், கடுமையான பயிற்சியை வழங்கவும் மருது சகோதர்களுக்கு உத்தரவிட்டார். மருது சகோதரர்கள் இருவருமே நேர்மை, உண்மையை கடைப்பிடிப்பவர்கள், சிறந்த வீரர்கள். தங்கள் தாய்நாடான சிவகங்கை மீது உயிரையே வைத்திருப்பவர்கள். பெரிய மருது போர்ப் பயிற்சியில் மிகச் சிறந்தவர். சின்னமருது விளையாட்டு பிள்ளையாக இருந்தாலும் அவரும் போர்க்கள பயிற்சியில் தேர்ந்தவர்.
இவர்கள் இருவரையும் நாட்டை நேசித்ததை போல மக்களும் இவர்களை நேரித்தனர். நவாப், கும்பினி தளபதி வெள்ளையன் பான்சோரை தனது மாளிகைக்கு வரவழைத்து பேசினார்.
velu nachiyar in tamil
"மிஸ்டர் பான்ஸோர், சிவகங்கை சீமையை கைப்பற்ற வேண்டும். முத்து வடுக நாதரை கைது செய்ய வேண்டும். அவரை நேரடியாக தாக்கினால் வெற்றி பெற முடியாது. நமது ஒற்றர்களை, அவரின் செயல் பாடுகளை கண்காணிக்கச் செய்து, தக்க சமயத்தில் தாக்கி சீமையை நாம் கைப்பற்ற வேண்டும் என்று குமைந்தான் நவாப் முகம்மது அலி.
"சிவகங்கை சீமையை கூடிய விரைவில் கைப்பற்றுவோம். அதற்கான வேலை நடந்துக் கொண்டிருக்கிறது என்றான் வெள்ளையன் பான்ஸோர்.1772-ம் ஆண்டில் ஜூன் 21-ம் தேதி முகம்மது அலி மகன் உம்தத்-உல்-உம்ரா, தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையில் சிவகங்கையை நோக்கிப் படையுடன் சென்றான். இன்னொரு – கும்பினி தளபதி பான்ஸோரும் தனது படையுடன் சிவகங்கையை நோக்கி சென்றான்.
ஆனால், உம்தத்-உல்-உம்ரா, சிவகங்கையை விட்டு சோழபுரத்தை கைப்பற்ற சென்றான். பான்ஸோர் சிவகங்கை சென்றான். 25.06.1772 அன்று நள்ளிரவு பூஜையில் கலந்து கொள்ள காளையார்கோவிலில் கோவில் கொண்டிருக்கும் காளிஸ்வரரை தரிசிக்க தன் இளைய மனைவி கௌரி நாச்சியாருடன் முத்துவடுக நாதர் கோவிலில் தங்கியிருந்தார்.
கோவிலுக்கு வெளியே சிறு படை இருந்தது. திடீரென்று கோவிலை சுற்றி தளபதி பான்ஸோர் பெரும்படை நின்றது. 'அடப்பாவிகளா, நேரில் மோத தைரியம் இல்லாமல் நட்ட நடு ராத்திரியில் இறைவனுக்கு பூஜை செய்யும் போதா, வந்து தாக்குவது பேடிகளே' என்று குமுறிய முத்து வடுக நாதர் கும்பினி படையோடு மோதினார்.
பான்ஸோர் பீரங்கியோடு வந்திருந்தான். பீரங்கியின் முன் வாள்வீச்சு எடுபடவில்லை. கடும்போரில் பல வெள்ளைய தலைகளை பறித்த முத்து வடுக நாதர், அப்போரில் மனைவியுடன் வீரமரணம் அடைந்தார்.
வேலுநாச்சியார் தப்பித்தல்
பகலில் படை நடத்தி போர் நடத்தாமல், இரவில் ஆந்தைகள் போல் வந்து போர் நடத்தி தன் வீரக் கணவரின் உயிரை பறித்து விட்டார்களே என்று பொங்கி எழுந்த வேலு நாச்சியார் சிவகங்கை மீது படையெடுக்க சொன்னபோது உடனிருந்த தாண்டவராய்ப் பிள்ளை, "அரசியாரே, இப்போது மோதுவது சரியான தருணமல்ல. உங்களை கொல்ல பெரும் படையோடு வந்து கொண்டிருக்கிறான். அவனோடு போரிட்டால் மரணம் நிச்சயம்.
"பிள்ளை, என் உயிர் கணவரின் உயிரை பறித்த பான்ஸோரை கொல்லாமல் விடமாட்டேன். வரட்டும் அவனை ஒரு கைப்பார்க்கிறேன்' என பொங்கினார் வேலுநாச்சியார்.
velu nachiyar in tamil
"அரசியாரே, நமது அரசர் வீரமரணம் அடைந்தது பெரும் வேதனைக்குரியது தான். பான்ஸோரிடம் பீரங்கி படை வருகிறது. அதன்முன் வாள் வீச்சு பயன் தராது. நாம் இப்போது தப்பிப்போம். பின் ஓரிடத்தில் தங்கி பெரும் படையை திரட்டி நவாப்பையும், கும்பினியாரையும் நமது மண்ணிலிருந்து துரத்துவோம்" என்றான் பெரிய மருது.
"ஆம், அரசியாரே நாம் தப்பிப்பது கும்பினிக்கு பயந்து அல்ல. பதுங்கித் தாக்கவே" என்றார் பிள்ளை.
வேலுநாச்சியார், தன் மகள் வெள்ளச்சி நாச்சியாரோடும், தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்களோடும் சிறு படையோடு திண்டுக்கல்லுக்கு அருகே உள்ள விருப்பாட்சி என்ற பாளையத்திற்கு சென்றனர். விருப்பாட்சி பாளையத்தை கோபால நாயக்கர் என்பவர் ஆண்டு வந்தார். கும்பினியர் மீது கோபமுள்ளவர். பூலித்தேவனின் நண்பர்.
வேலுநாச்சியாரை அன்புடன் வரவேற்ற அவர், வந்தவர்கள் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார். திண்டுக்கல் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது. பான்ஸோர் காளையார் கோவிலை சூறையாடினான். 50,000 ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றான். (அந்த காலத்தில் இதன் மதிப்பு அதிகம்.)
நவாப்,சிவகங்கை சீமைக்கு, 'உசைன்பூர்' என்று பெயரிட்டான். மக்களின் மேல் வரி போட்டு அவர்களை சித்ரவதை செய்தான். கப்பம் கட்டாத நிலங்களைப் பறிமுதல் செய்து, அதன் மூலம் கொள்ளை அடித்தான். வேலுநாச்சியாரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து விட்டு மருது சகோதரர்கள் சிவகங்கை சென்று மக்களை நவாப்பிற்கு எதிராக தூண்டி விட்டனர். வேலுநாச்சியார், தனது மூத்த மந்திரி தாண்டவராய பிள்ளையை அழைத்தார்.
"அரசி!" சொல்லுங்கள்.
"மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு கடிதம் எழுதுங்கள். அவருக்கு கும்பினிகளை கண்டால் பிடிக்காது.
ஆங்கிலேயரை நாட்டை விட்டு துரத்த கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். அவரிடம் சிவகங்கை சீமையை மீட்க 5000 போர் வீரர்களையும், நம்மோடு அனுப்பி வைக்க கேட்போம்' என்றார் வேலுநாச்சியார்.
velu nachiyar in tamil
"நல்ல யோசனை " என்ற பிள்ளை 8.12.1772-ல் ஹைதர் அலிக்கு கடிதம் எழுதினார்.
ஹைதர் அலியும் படைகளை அனுப்புவதாக கூறினார். ஆனால் படை நடத்திச் செல்ல இது ஏதுவான நாளில்லை. சில மாதங்கள் போகட்டும் என்றார் அலி. வேலுநாச்சியார் அதை ஏற்றார். 1773-ம் ஆண்டு முதுமையின் காரணமாக பிள்ளை மரணமடைய வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் மிகவும் வேதனை அடைந்தனர்.
சிவகங்கைமின் ராணியானார் வேலுநாச்சியார்
மருது சகோதரர்கள் புதிய படைகளை திரட்டினர். வேலுநாச்சியாரும் படைவீரர்களுக்கு பயிற்சி அளித்தார். எட்டு ஆண்டுகள் ஓடின. இனியும் சிவகங்கையை விட்டு வைத்தால் நவாப்பும், கும்பினியும் நாட்டை தரை மட்டமாக்கி விடுவார்கள் என்பதை உணர்ந்தார் வேலுநாச்சியார்.
மேலும் மக்கள் தங்கள் தலைவியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வப்போது நவாப்புக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தனர்.
மருது சகோதரர்களை அழைத்து, "இனியும் தாமதிப்பதில் பயனில்லை. நாம் சிவகங்கையை கைப்பற்றியே ஆக வேண்டும். மன்னர் ஹைதர் அலி நம்மை அவரின் உடன் பிறந்த சகோதரியைப் போல என்னையும், நம்மையும் சிறந்த முறையில் அன்பு செலுத்தி பாதுகாத்தார். அவரிடம் படைகளை திரட்டி கொண்டு செல்வோம். மன்னரிடம் அனுமதி கேட்டு வாருங்கள்" என்றார் அரசி.
மருது சகோதரர்கள் ஹைதர் அலியின் படைத்தளபதிகளிடம் தங்களின் எண்ணங்களை கூறினார்கள். வேலுநாச்சியார் எண்ணம் ஹைதர் அலிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வத்தலக் குண்டு பகுதியில் வேங்கைப் புலி ஒன்று பயிர்களை நாசப்படுத்துவதோடு மட்டுமின்றி, மக்கள் பலரை கொன்று வந்தது.
அதை அழிக்க பலர் முயன்றும் இயலாத நிலை. சுல்தான் மருது சகோதரர்களை அழைத்தார். வத்தலக் குண்டு வேங்கை புலியை கொல்லும்படி கேட்டுக் கொண்டார். மருது சகோதரர்கள் சென்றனர். காட்டில் இரண்டு நாட்கள் அங்குமிங்கும் அலைய விட்ட புலியை மூன்றாம் நாள் கொன்றனர்.
அவர்களின் வீரத்தை மெச்சிய ஹைதர் அலி, சிவகங்கை மீது படையெடுக்க அவர்களுக்கு ஆயிரம் படைவீரர்களையும், ஆயிரம் குதிரைப் படைகளும், 12 பீரங்கிகளையும் கொடுத்தார். மேலும் படைகளின் செலவுக்கு 1 லட்சம் பொன்னும் கொடுத்தனுப்பினார். இராணியை பல்லக்கில் ஏற்றி விட்டு மருது சகோதரர்கள் ஆளுக்கொரு குதிரையில் ஏறினார்கள்.
திண்டுக்கல்லிருந்து வேலுநாச்சியாரின் பெரும் படை வருவதை அறிந்த நவாப்பும், கும்பினி படையும் நடுவழியிலேலே தடுக்க முடிவு செய்தனர். மருது சகோதரர்கள் தங்கள் படையை நான்காக பிரித்தனர். "திருப்பவனம்' என்ற ஊரில் நவாப்பின் அடியாள் மல்லாரி ராவ் பீரங்கியோடு மருதுசகோதரர்களை எதிர்த்தனர்.
velu nachiyar in tamil
அந்த போரில் மல்லாரிராவ், வளரி மூலம் கொல்லப்பட அவனின் படைகள் பின் வாங்கி ஓடினர். முதல் வெற்றி. திருப்பவனத்தின் எல்லை வரை மல்லாரி ராவின் படையை துரத்தி விட்டு, தனது ஆளை அங்கு சிறு படையோடு விட்டு விட்டு, அவ்வூரை கடந்தனர். மருதுசகோதரர்களும், இராணியும் சோழ வந்தானை அடைந்தனர். அங்கு ஓரிரு நாட்கள் தங்கினர். வண்டியூர் வழியே சிலைமான் வந்தனர். அங்கு மல்லாரிராவின் சகோதரன் ரெங்காராவ், இராணியை எதிர்த்தான்.
அண்ணன் மரணத்தால் அவன் கோபத்தில் இருந்தான். சின்னமருது, "சண்டை வேண்டாம், வழியை விடு "என்று ரங்கராவை கேட்டான். "என் அண்ணனை கொன்ற உங்களை சும்மா விடமாட்டேன்" என்று ரங்கராவ் ஆத்திரத்துடன், அவர் மீது பாய சின்னமருது கைவாளால் அவனை கொன்றான். மதுரையில் கர்னல் மார்ட்டிசின் படையோடு இருப்பதை ஒற்றர் மூலம் அறிந்த வேலு நாச்சியார் மருதுவின் தலைமையிலான படையை அனுப்பி வைத்தார். இருபடைகளும் கடுமையாய் மோதின.
கர்னல், மருதுவின் போர் ஆற்றலில் தடுமாறினார். சமாளிக்க முடியாமல் மருது சகோதரர்களின் தாக்குதலில் வெள்ளையர் தலைகள் தரையில் உருண்டன. என்றாலும் இரண்டாம் நாள் சண்டையில் மருதுவின் படைவீரர்கள் பலர் இறந்தனர். இந்த நிலையில் கள்ளர் படையும், பிரான்மலை இராணுவப் படையும் உதவிக்கு வர, கர்னல் அடி தாங்காமல் மானாமதுரையை விட்டே ஓடினார். .
வேலுநாச்சியாருக்கு பெரும் வெற்றி அது. அடுத்து சிவகங்கையை கைப்பற்றப் பெரும் தாக்குதலை நடத்த முடிவு செய்தார். சிவகங்கை மீட்க ஒரு பிரிவில் வேலு நாச்சியார் தலைமை தாங்கினார். காளையார் கோவிலை மீட்கும் படைக்கு மருது சகோதரர்களை நியமித்தார். திருப்பத்தூர் படைப்பிரிவிற்கு நன்னியம்பலம் என்பவரை தலைமை ஏற்கச் செய்தார்.
நவாப் மற்றும் கும்பினி படைக்கு எதிராக முன்முனை தாக்குதலை நடத்தினார். வேலுநாச்சியாரின் கடும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கும்பினி மற்றும் நவாப் படைகள் தடுமாறகணவனை கொன்ற பான்ஸோரை போரின் போது அடிபணிந்தபோது, அவனை கொல்ல வாளை உயர்த்திய வேலுநாச்சியார். பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்ற தாயுமான அடிகளின் நல்வாக்குப்படி அவனை மன்னித்து, உயிர்பிச்சை அளித்தார். கும்பினியார் வேலுநாச்சியார் பீரங்கி படையோடு வருவார் என்று எதிர்பார்க்கவில்லை.
மருது சகோதரர்கள் காளையார் கோவிலில் முகாமிட்டிருந்த நவாப் மற்றும் கும்பினி படைகளை அங்கிருந்து துாத்தியடித்தனர். மும்முனை கடும் தாக்குலை சமாளிக்க முடியாமல் நவாப் மற்றும் கும்பினி படைகள் சிவகங்கை சீமையை விட்டு ஓடினர்.
velu nachiyar in tamil
வேலுநாச்சியார் சிவகங்கை மீட்ட ஆண்டு
1780-ம் ஆண்டு பொது மக்களின் வெற்றி முழக்கத்தோடும் பெரும் வரவேற்போடும் எட்டு ஆண்டுகள் கழித்து, தமது மண்ணில் காலடி பதித்தார் வேலுநாச்சியார். மீண்டும் சிவகங்கைக்கு வேலுநாச்சியார் அரசியானார். மருது சகோதரர்கள் பிரதான மந்திரியானார். மக்கள் வேலுநாச்சியார் அரசி ஆனதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
வெள்ளச்சி நாச்சியார் அரசியாதல்
வேலு நாச்சியார் தனக்கு ஐம்பது வயதானதால் தனது மகளை சிவகங்கை சீமையின் அரசியாக்க முனைந்தார். மருது சகோதரர்கள் அதற்கு ஆதரவு கொடுத்தனர். தன் மகளை அரசியாக்கி மருது சகோதரர்களில் பெரிய மருதுவை படைத்தலைவராகவும், சின்ன மருதுவை தலைமை முதலமைச்சராகவும் நியமித்து, வேலுநாச்சியார் அரசாண்டார். மக்களுக்கான சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் வேலுநாச்சியார்.
மருது சகோதரர்களின் துணைக் கொண்டு, தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊருணிகள், குளங்களை வெட்ட ஏற்பாடு செய்தார் வேலுநாச்சியார். இதனால் விவசாயம் பெருகியது. தனது ஆட்சிக்குட்பட்ட பல ஊர்களுக்கு சாலைகளை அமைத்தார். அழகன் குளம், குடியூர், திருப்பத்தூர், குன்றக்குடி, மானா மதுரை போன்ற ஊர்களின் சாலைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை மேம்படுத்த, வணிகம் வளர்ந்தது.
காளையார் கோயில் கோபுரம் பாழடைந்து கிடப்பதை கண்ட மருதுசகோதரர்கள் இது குறித்து அரசி யிடம் கூறினார். கோவில் கோபுரத்தை அழகாக உயர்த்திக் கட்டினார். இன்றும் கோவில் கோபுரம் கம்பீரமாக நிற்கிறது என்றால் வேலுநாச்சியாரின் உபயம்தான். கோவிலுக்கு தேர் இல்லை என்பதை உணர்ந்து மரத்தாலேயே தேர் ஒன்றை செய்து காளேஸ்வரனுக்கு அதை காணிக்கையாக்கினார்.
ஒரு நாள் மாலை தனது மாளிகையில் அமர்ந்திருந்தார். அருகில் மருது சகோதரர்கள். முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் வந்திருந்தார்கள். அவர்கள் சருகணி என்ற ஊரிலிருந்து வந்திருந்தார்கள். பெரியவர்களை எழுந்து நின்று வரவேற்றார் வேலு நாச்சியார். பாதிரியார்களிடம் ஆங்கிலத்திலும், முஸ்லீம்களிடம் உருதுவிலும் பேசினார். தங்கள் தங்கள் வழிபாட்டுக்கு சர்ச்சும், மசூதியும் கட்ட உத்தரவு தர வேண்டும் என்றனர். உடனே சருகணியில் அரசுக்கு உரிய இடங்களில் இரு மத கோவில்களை கட்ட கட்டளை இட்டார்.
பிற மதத்தை மதிக்கும் உயர்ந்த குணத்தைக் கண்டு அவரை அவர்கள் பாராட்டினர். தன்னை எட்டாண்டுகள் காப்பாற்றிய ஹைதர் அலி என்பவரை அவரால் மறக்க முடியுமா என்ன? இராமேஸ்வரம் கோயிலுக்கு ஏராளமாய் அள்ளிக் கொடுத்தார். ஏழ்மை இல்லாத நாடாக தன் சீமையை மாற்றி அமைக்க வேண்டும் என்று உறுதியுடன் செயல் பட்டார்.
வேலுநாச்சியார் நினைவு நாள்
மக்கள் என்றென்றும் நினைத்து நினைத்து பெருமை படும்படியாக வாழ்ந்த வேலுநாச்சியார் 23.12.1796-ம் ஆண்டு இவ்வுலக வாழ்க்கையைத் துறந்தார். இந்திய வரலாற்றிலேயே கணவர் இறந்ததும் உடன்கட்டை ஏறாமல், தன் கணவனை கொன்றவனை கொல்லாமல் சாகமாட்டேன் என்று சவால் விட்டு வாழ்ந்த வீரப்பெண். சிவகங்கைப் போரில் இவர் காட்டிய வீரத்தை கும்பினி படை தளபதிகள் வியந்து பல நூல்களில் எழுதியுள்ளனர்.
இந்திய சுதந்திர போராட்ட களத்தில் ஆங்கிலேயர்க்கு எதிராக முதல் முதலாக போர் தொடுத்து வெற்றிப் பெற்ற முதல் வீரப் பெண்மணி. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே பல மொழிகளை கற்றுத் தேர்ந்த்திருந்ததே மாபெரும் சாதனை. இந்திய பெண்களின் வழிகாட்டியாய் திகழும் வேலுநாச்சியாரை என்றென்றும் நம் நினைந்து நாட்டுப் பற்றுள்ளவராய் மாற வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu