/* */

வேலூரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்; 21 பேர் கைது

வேலூரில் ஆந்திர, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 851 மதுபாட்டில்கள் பறிமுதல். 21 பேர் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

வேலூரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்; 21 பேர் கைது
X

மாதிரி படம்


வேலூர்மாவட்டத்தில் முழுஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி கள்ளச்சந்தையில் மது மற்றும் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணி மற்றும் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் மது, சாராயம் விற்ற 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து வாகனங்களில் வேலூருக்கு கடத்தி வரப்பட்ட 831 மதுபாட்டிகள் உள்பட 851 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 1,400 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டன. 225 லிட்டர் சாராயம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்

Updated On: 7 Jun 2021 5:59 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  3. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  4. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    கருப்பு பேரீச்சம்பழம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    95 மேஜை, 288 பணியாளர்கள்: திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ண...
  7. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  8. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  9. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  10. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!