/* */

வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் மானியம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் பி.வி.சி.குழாய் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது

HIGHLIGHTS

வேலூர்  மாவட்ட விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் மானியம்
X

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர்) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் பி.வி.சி.குழாய் வாங்குவதற்கு ஒரு நபருக்கு ரூ.15000 மானியமும் மற்றும் மின் மோட்டார் வாங்குவதற்கு ரூ.10000 மானியமும் வழங்கப்படும்.

இந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்,

சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிட சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், புலப்பட வரைபடம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகிய ஆவணங்களுடன் http://application.tahdco.com என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தாட்கோ மூலம் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், துரித மின் இணைப்பு திட்டத்தில் பயனடைந்தவர்களும் மற்றும் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களும் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்

மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ, நெ.153 / 1, கோவிந்தராஜ் தெரு, ஆதிதிராவிடர் மாணவர் விடுதி வளாகம், ஓட்டேரி, வேலூர் 632 002. செல்: 9445029483 தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 11 March 2022 9:10 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!