/* */

வேலூர் மாவட்டத்தில் அரசு, நிதியுதவி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது

வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் அரசு, நிதியுதவி பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்தில் அரசு, நிதியுதவி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது
X

வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் ​அரசு, நிதியுதவி பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது

வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது . கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு தமிழகத்தில் பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டன . இதையடுத்து , ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது . இதற்கிடையில் , கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை 9 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு வரவழைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது . இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது .

இந்த கல்வி ஆண்டிற்கு பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கான நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதன்படி , வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்காக பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது . பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளிக்கு வந்தனர் . பிளஸ் 1 சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை வழங்கும் பணிகள் நடந்தது .

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் தமிழகத்தில் இந்தாண்டு கொரோனா தொற்றின் காரணமாக மாணவர் சேர்க்கை முறையாக நடைபெறவில்லை . வரும் 21 ம் தேதியிருந்து பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது . மற்ற வகுப்புகளுக்கும் , மாணவர்களை சேர்ப்பு சத்துணவு சாப்பிடக்கூடிய மாணவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பணியும் தொடங்க உள்ளது . இதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது .கடந்த ஆண்டைபோல கூடு தலாக மாணவர் சேர்க்கை நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது . பள்ளி கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பெற்றோர்களுக்கு வீடு வீடாக சென்று எடுத்துரைக்க வேண்டும் . ஒவ்வொரு பள்ளியிலும் சேர்க்கை விதிகதம் அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது .என்றனர்.

Updated On: 14 Jun 2021 1:28 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்