/* */

வேலூர் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டத்தில் 880 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன்

பொதுமக்கள் தடுப்பூசி போடுவது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கையால் தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 880 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு ஒரேநாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகள் ஆகிய அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியின் அருகே நடைபெறும் தடுப்பூசி முகாமிற்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை காலை 7 முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். இந்த முகாமினை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வேலூர் மாவட்டத்தை 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்ட மாவட்டமாக உருவாக்கிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.

Updated On: 10 Sep 2021 2:50 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!