/* */

குடியாத்தம் பகுதியில் வனவிலங்குகளில் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள்

குடியாத்தம் பகுதியில் வனவிலங்குகளில் தாகம் தீர்க்க சூரிய மின்சக்தியுடன் ஆழ்துளை கிணறுகள் அமைத்து 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது

HIGHLIGHTS

குடியாத்தம் பகுதியில் வனவிலங்குகளில் தாகம் தீர்க்க  தண்ணீர் தொட்டிகள்
X

குடியாத்தம் பகுதியில் வனவிலங்குகளில் தாகம் தீர்க்க  25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதி பல ஆயிரம் ஏக்கரில் உள்ளது. இந்த வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், செந்நாய்கள், காட்டுப் பன்றிகள் என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுத் தேடி அடிக்கடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிக்குள் நுழைந்துவிடுகிறது.

அப்போது நாய்கள் விரட்டி அதில் ஏராளமான மான்கள் இறந்த சம்பவங்களும் உண்டு. அதே போல் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த சிறுத்தைகள் தாக்கி கால்நடைகள் இறந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

குடியாத்தம் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க முக்கிய ஆதாரமான தண்ணீர் தேவை என்பதால் வனப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதற்கு சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்தது. அதன்படி 11-வது நிதிக்குழு நிதியுதவியுடன் சுமார் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அனுப்பு பகுதியிலிருந்து துருகம் செல்லும் பாதையில் தலா 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தரை தள குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது

அதேபோன்று ஆழ்துளைகிணறுகள் அமைத்து சூரியசக்தி மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இரண்டு 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைத்தள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டது. இதனால் இப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராம பகுதிகளுக்கு செல்லும் நிலை இனி வராது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 27 Jun 2021 4:14 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  2. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  4. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  5. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  6. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  7. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  10. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்