/* */

வேலூர் அருகே பேரணாம்பட்டில் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது

வேலூர் அருகே பேரணாம்பட்டில் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வேலூர் அருகே பேரணாம்பட்டில் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது
X

பதுக்கல் ரேஷன் அரிசி ( பைல் படம்)

வேவேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரம் சின்னபஜார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்பட உள்ளதாகவும் வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது ஒரு வீட்டில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் (வயது 42) என்பவர் ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதும், அவர் மீது ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு 50 கிலோ வீதம் 21 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 1,050 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே அந்த பகுதியில் பதுங்கியிருந்த பார்த்திபனை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Updated On: 21 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...