/* */

பேரணாம்பட்டு அருகே சுவர் இடிந்து விழுந்து 11 ஆடுகள் பலி

பேரணாம்பட்டு அருகே பலத்த மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 11 ஆடுகள் பலி

HIGHLIGHTS

பேரணாம்பட்டு அருகே சுவர் இடிந்து விழுந்து 11 ஆடுகள் பலி
X

சுவர் இடிந்து விழுந்து 11 ஆடுகள் பலி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சிள தினங்களாக மாலை முதல் இரவு வரை இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது. கடந்த 2-ந் தேதி 56 மி.மீ. மழையும்,நேற்று முன்தினம் 19 மி.மீ. மழையும் பெய்துள்ளது. கடந்த 3 தினங்களாக இப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையினால் பத்தலப்பல்லி, மதினாப்பல்லி மலட்டாறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

பேரணாம்பட்டு அருகே உள்ள மிட்டப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவர் தனது வீட்டருகே மண் சுவரில் ஒலை கொட்டகை அமைத்து அதில் 25-க்கு மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகளை பட்டியில் அடைத்திருந்தார்.

அதிகாலை 4 மணியளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது. உடனே ரமேஷ் சென்று பார்த்த போது மண் சுவர், கூரையுடன் இடிந்து விழுந்திருந்தது. அதன் இடிபாடுகளுக்குள் ஆடுகள் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதைக் கண்டு ரமேஷ் அதிர்ச்சியடைந்த அவர் ஆடுகளை மீட்க முயன்றார். அப்போது இடிபாடுகளில் சிக்கி 2 குட்டிகள், 9 ஆடுகள் என மொத்தம் 11 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்திருந்தது. இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 14 ஆடுகளை உயிருடன் மீட்டார். அதில் 2 ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டிருந்தது.

பலத்த மழைகாரணமாக ஆட்டு கொட்டகை அமைக்கப்பட்டிருந்த மண் சுவர் இடித்து விழுந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த மசிகம் கிராம நிர்வாக அலுவலர் கோபி நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஏரிகுத்தி கால்நடை மருத்துவமனை மருத்துவர் தமிழரசன் சென்று காயமடைந்த 2 ஆடுகளுக்கு சிகிச்சையளித்து, இறந்த ஆடுகளுக்கு அங்கேயே பிரேத பரிசோதனை செய்தார்.

Updated On: 4 July 2021 3:50 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...