/* */

வந்தவாசியில் குடும்பத்தினருடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்

வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வந்தவாசியில் குடும்பத்தினருடன் சாலை மறியல்

HIGHLIGHTS

வந்தவாசியில் குடும்பத்தினருடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்
X

வந்தவாசியில் குடும்பத்தினருடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷினி (வயது 34). இவருடைய கணவர் தட்சிணாமூர்த்தி (39). சென்னை ஆவடியை சேர்ந்த இவர் எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வருகிறார். சுபாஷினி, தட்சிணாமூர்த்திக்கு 2-வது மனைவி என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு மதுமித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தட்சிணாமூர்த்தி சென்னையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுபாஷினி வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுபாஷினி வந்தவாசி கோட்டை மூலப்பகுதியில் தனது குடும்பத்தினருடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Updated On: 31 Aug 2021 6:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!