/* */

விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் பெண் பிணம்

மருதாடு கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க பெண் , இறந்த நிலையில் மீட்பு

HIGHLIGHTS

விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் பெண் பிணம்
X

விவசாய கிணற்றில் மீட்கப்பட்ட பெண்ணில் உடல் 

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக மிதப்பதை பொதுமக்கள் பார்த்து கீழ்கொடுங்கலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இவர் தண்ணீர் குடிப்பதற்காக கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசி உள்ளார்களா என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 May 2022 6:18 AM GMT

Related News