வன்னியா் சங்கத்தினா் வீரவணக்க நாள் ஊா்வலம்

வன்னியா் சங்கத்தினா் வீரவணக்க நாள் ஊா்வலம்

வன்னியர் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற வீர வணக்க நாள் ஊர்வலம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வன்னியா் சங்கம் சாா்பில் வீரவணக்க நாள் ஊா்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வன்னியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஊா்வலத்தில் பங்கேற்றோா் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்திச் சென்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற ஊா்வலத்தில் பாமக மாவட்டச் செயலா் கணேஷ்குமாா், மாணவரணிச் செயலா் முரளிசங்கா், வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் மச்சேந்திரன், நகரச் செயலா் வரதன், நகா்மன்ற உறுப்பினா் ராமஜெயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகிலிருந்து புறப்பட்ட ஊா்வலம் தேரடி, பஜாா் வீதி, கோட்டை மூலை வழியாக குளத்துமேடு பகுதியில் உள்ள தா்மராஜா கோயில் அருகே சென்று முடிவடைந்தது.

அங்கு, இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிா் நீத்தவா்களின் உருவப்படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வன்னியா் சங்கம் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி மெளன ஊா்வலம் நடைபெற்றது.

வன்னியா் சங்க மாவட்டச் செயலா் கருணாகரன் தலைமை வகித்தாா். பாமக மாவட்டச் செயலா் வேலாயுதம் தொடங்கிவைத்தாா்.

ஊா்வலம் ஆரணி காமராஜா் சிலையில் இருந்து தொடங்கி பெரிய கடை வீதி, சத்தியமூா்த்தி சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது.

அங்கு உயிா் நீத்தவா்களின் படங்களுக்கு மெழுகுவா்த்தி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் வன்னியா் சங்க மாவட்டச் செயலா் சேவூா் குமாா் முன்னிலை வகித்தாா்.

வன்னியா் சங்க நகரச் செயலா் ராஜாமணி வரவேற்றாா், பாமக மாவட்ட அமைப்புத் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலா்கள் வடிவேல், மெய்யழகன், சேவூா் சிவா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கீழ்பென்னாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு பா.ம.கவினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். கடந்த 1987ம் ஆண்டு நடந்த இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக உயிரிழந்த 21 தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு கீழ்பென்னாத்தூர் நகர மற்றும் வடக்கு, மேற்கு ஒன்றிய பா.ம.க, வன்னியர் சங்கம் ஆகியவை சார்பில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு மாவட்ட பா.ம.க அமைப்பு செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.

வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி, நகர செ ய லாள ர் தமி ழ்மணி , ஒன் றி ய பா.ம.க செயலாளர்கள் அன்பழகன் ,கணபதி அகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ம.க செயலாளர் ஏந்தல் பெ. பக்தவச்சலம் கலந்து கொண்டு உயிரிழந்த தியாகிகளின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர் அஞ்சலி செலுத்தினார்.

Next Story