வந்தவாசியில் திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு

வந்தவாசியில் திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு
X

பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு, திமுக அலுவலகத்தை திறந்து வைத்தது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை, வந்தவாசியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மாவட்ட திமுக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, தலைமையில் நடைபெற்ற விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு, அலுவலகத்தை திறந்து வைத்தது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், திருவண்ணாமலை முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?