/* */

வந்தவாசியில் மரக்கன்றுகள் நடும் விழா

வந்தவாசி ரத்ததான குழு மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தமிழ் செம்மொழி மன்றம் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

HIGHLIGHTS

வந்தவாசியில் மரக்கன்றுகள் நடும் விழா
X

வந்தவாசி அடுத்த மும்முனி கிராமத்தில் மரக்கன்று நடும் சட்டமன்ற உறுப்பினர்

வந்தவாசி ரத்ததான குழு மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தமிழ் செம்மொழி மன்றம் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்தவாசி ரத்ததான குழு ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி , ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழ் செம்மொழி மன்ற மாவட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மரம் நடுவதால் ஏற்படும் நன்மை குறித்தும், மரம் நடுவது மட்டுமல்லாமல் ஊராட்சி மன்ற நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி பராமரிக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் தாசில்தார் முருகானந்தம் , செம்மொழி மன்ற உறுப்பினர்கள் , ரத்த தான தந்த உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Nov 2021 6:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!