வெண்குன்றம் மலையில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் கண்காணிப்பு

ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை கோவிலில் சமூக விரோதிகள் அதிகமாக நடமாட்டம் இருப்பதால் போலீசா ர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வெண்குன்றம் மலையில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் கண்காணிப்பு
X

சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.

வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை கோவிலில் சமூக விரோதிகள் அதிகமாக நடமாட்டம் இருப்பதால் போலீசா ர் தடுப்பு வேலி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வந்தவாசியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில் 1500 அடி உயரமுள்ள தவளகிரி மலையில் தவளகிரீஸ்வரர் கோவில் உள்ளது.

கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். பவுர்ணமி அன்று பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து வழிபடுவர்.

இந்த மலையில் அரியவகை மூலிகைச் செடிகள் மரங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் மலையில் தீ வைத்தனர். அப்போதிலிருந்தே பக்தர்கள் இந்த மலையைக் காக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்

மேலும் தற்போது இந்த மலையில் சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மலையின் அடிவாரத்தில் காவல்துறை அதிகாரிகள் தடுப்பு வேலி அமைத்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களை தீவிரமாக சோதனை செய்து, அவர்களுடைய முழு விலாசத்தை பெற்றுக் கொண்ட பிறகு தான் மலைக்கு செல்ல அனுமதித்து வருகின்றனர்.

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் அருகில் உள்ள பர்வத மலைக்கு செல்ல ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என போலீசார் அறிவித்திருந்தனர்.

அங்கும் காவல்துறையினரின் தீவிர சோதனைக்கு பிறகு பக்தர்கள் மேலே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது கார்த்திகை தீபத்தன்று இக்கோயில்களுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்கின்ற காரணத்தினால் போலீசார் மிக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 25 Nov 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. சென்னை
    மீண்டும் செயல்படத் தொடங்கியது சென்னை விமான நிலையம்
  2. திருமங்கலம்
    Karthikai Month Special Pooja மதுரை மாவட்ட கோயில்களில் ...
  3. தமிழ்நாடு
    அமலாக்கத்துறை அதிகாரி ஜாமீன் மனு தள்ளுபடி
  4. டாக்டர் சார்
    Fusidic Acid Cream Uses In Tamil தோல் நோய்களுக்கு நிவாரணமளிக்கும் ...
  5. தமிழ்நாடு
    நடிகர் விஷாலுக்கு சென்னை மேயர் பிரியா பதிலடி
  6. டாக்டர் சார்
    Urinary Bladder Meaning In Tamil சிறுநீரக தொந்தரவு வராம இருக்கணுமா? ...
  7. தமிழ்நாடு
    4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  8. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே, காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்
  9. வணிகம்
    Bitcoin Crosses $40000 Mark-எகிறிய கிரிப்டோ சந்தை..! காரணம் என்ன..?
  10. கந்தர்வக்கோட்டை
    விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு...