/* */

வந்தவாசியில் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

வந்தவாசியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நகராட்சி ஆணையாளர் சோதனை

HIGHLIGHTS

வந்தவாசியில்  தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
X

கடை மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருள்கள் நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காந்தி ரோட்டில் கவுதம் என்பவரின் கடையிலும், பெட்டிநாயுடு தெருவில் சுப்பிரமணியன் என்பவரின் வீட்டிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர். சுப்பிரமணியனின் வீட்டிலும், கவுதமின் கடையிலும் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள், கரண்டிகள் ஆகிய பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் ரூ.5 லட்சம் மதிப்பிலான 4 டன் எடையிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 6 Jun 2022 7:12 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!