/* */

வந்தவாசி அருகே தனி வருவாய் கிராமம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

வந்தவாசியை அடுத்த கொண்டையங்குப்பம் தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

HIGHLIGHTS

வந்தவாசி அருகே தனி வருவாய் கிராமம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
X

 தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொண்டையங்குப்பம் கிராமத்தில் 650-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள மக்கள் வருவாய் சம்பந்தப்பட்ட சான்றிதழ் வாங்க வேண்டுமென்றால் நல்லூர் கிராமத்துக்கு தான் செல்ல வேண்டும். இதனால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிரமப்பட்டு வந்தனர். கொண்டையங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் என 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பல போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கொண்டையங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் எனக்கோரி 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு காஞ்சீபுரம் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் கொண்டையங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டமாக கலெக்டர் அலுவலகம் மற்றும் கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்படும், எனப் பொதுமக்கள் கூறினர். கொண்டையங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக்கோரி ஊர் மக்கள் துணைத் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

Updated On: 3 Jun 2022 7:27 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  4. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  5. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  10. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?