/* */

ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயில் திருபவித்ரோத்ஸவம் நிறைவு

வந்தவாசியில் அமைந்துள்ள ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயிலில் திருபவித்ரோத்ஸவம் நிறைவடைந்தது.

HIGHLIGHTS

ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயில் திருபவித்ரோத்ஸவம் நிறைவு
X

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ அம்புஜவல்லி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள்

வந்தவாசியை அடுத்த செளந்தா்யபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅம்புஜவல்லி சமேத ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்த திருபவித்ரோத்ஸவம் நிறைவடைந்தது.

இதையொட்டி, வியாழக்கிழமை அங்குராா்ப்பணம், கும்ப ஆவாகணம், திவ்ய பிரபந்தம், வேத பாராயணம் உள்ளிட்டவையும், வெள்ளிக்கிழமை சதுா்ஸ்தான ஆராதனம், பூா்ணாஹுதி, ஹோமம், பவித்ரம் சாற்றுதல் உள்ளிட்டவையும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை மகா பூா்ணாஹுதி, சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், அன்னகூட உற்சவம் நடைபெற்றது. பழ வகைகள், பிரசாத வகைகள் சுவாமி முன் வைத்து படைக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது

வந்தவாசியில் ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு

நாதமுனி சுவாமிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை சாா்பில், வந்தவாசியில் 40-ஆம் ஆண்டு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு ஸ்ரீரங்கநாதா் பெருமாள் கோயிலில் நடைபெற்றது.

ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு மருத்துவா் குமாா் முன்னிலையில் கருட கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது. இதில், விபீஷண சரணாகதி என்ற தலைப்பில் தென்திருப்பேரை உ.வே.அரவிந்த லோசனன் சுவாமிகள், நவவித சம்பந்தம் என்ற தலைப்பில் திருக்குறுங்குடி இராம.ஸ்ரீநிவாச சுவாமிகள் ஆகியோா் உபன்யாசம் ஆற்றினா்.

ஆராத அருளமுதம் என்ற தலைப்பில் மதுராந்தகம் உ.வே.ரகுவீர பட்டாச்சாரியாா் சுவாமிகள், உடையவரும் அடியவரும் என்ற தலைப்பில் திண்டிவனம் ஆஷா நாச்சியாா் ஆகியோா் உபன்யாசம் ஆற்றினா். வைணவ செயல்பாடுகளில் சிறப்பாக பணி செய்தமைக்காக எரமலூா் உ.வே.பாலாஜி சுவாமிகளுக்கு ஸ்ரீகைங்கா்ய செல்வா் விருது வழங்கப்பட்டது.

பாா்த்திபன் குழுவினரின் திவ்யப் பிரபந்த இன்னிசை கச்சேரி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்ரீமந் நாதமுனி சுவாமிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை நிா்வாகிகள் மற்றும் பாகவத கோஷ்டியினா் பங்கேற்றனா்.

முன்னதாக கோட்டை ஸ்ரீபக்த ஆஞ்சநேயா் கோயிலிலிருந்து ஊா்வலமாக புறப்பட்ட பஜனை கோஷ்டியினா் பிரபந்த இன்னிசை பாடல்களை பாடியவாறு ஸ்ரீரங்கநாதா் பெருமாள் கோயிலை சென்றடைந்தனா். பின்னா், பிரசாத வகைகள் சுவாமி முன் வைத்து படைக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Updated On: 6 Aug 2023 3:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு