ஆரணி பகுதியில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

ஆரணி பகுதியில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
ஆரணி, வந்தவாசி, மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்துவரும் கனமழையால் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
ஆரணி பகுதியில் 115.5 மி மீ , அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இதனால் ஆரணி சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இந்த கொரோனா காலத்தில் வறுமையிலும் கூட்டுறவு சங்கத்தில் கடனை பெற்று விவசாயம் செய்து வந்த நிலையில் கனமழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு நெற்பயிர்கள் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu