/* */

தேசூர் விற்பனைக்கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

தேசூர் விற்பனைக்கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
X

ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம், தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வழக்கம்போல் விவசாயிகள் பல்வேறு வகையான நெல் மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்தனர். அதில் 91 லாட்டுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது. குண்டு ரகத்தைச் சேர்ந்த கோ 51, ஆர்.என்.ஆர். ஆகிய ரக நெல் மூட்டைகளை, 20 லாட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. மீதி உள்ள 71 லாட்டுகள், பொன்னி ரக நெல் மூட்டைகளாகும்.

பொன்னி ரக நெல்லுக்கு, வியாபாரிகள் குறைந்த விலையை நிர்ணயம் செய்ததால் ஆவேசமடைந்த விவசாயிகள், திடீரென ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜமாணிக்கம் விரைந்து வந்து விவசாயிகள், வியாபாரிகளை வரவழைத்து விசாரித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

அதற்கு வியாபாரிகள், பொன்னி நெல்லுக்கு இவ்வளவு தான் விலை நிர்ணயம் செய்ய முடியும், எனக் கூறி அங்கிருந்து சென்று விட்டனர். உடனே விவசாயிகளும் விற்பனை செய்யாமல், 11 லாட் பொன்னி நெல் மூட்டைகளை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு திருப்பி எடுத்துச்சென்றனர்.

Updated On: 8 Jan 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்