/* */

வந்தவாசி ஒன்றியத்தில் உள்ள ஏரி நீர் வரத்து கால்வாய்களை தூர்வார கோரிக்கை

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தில் ஏரி நீர் வரத்து கால்வாய்களை தூர்வார உறுப்பினர்கள் கோரிக்கை

HIGHLIGHTS

வந்தவாசி ஒன்றியத்தில் உள்ள ஏரி நீர் வரத்து கால்வாய்களை தூர்வார கோரிக்கை
X

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பருவமழை தொடங்கவுள்ளதால், வந்தவாசி ஒன்றியத்தில் உள்ள ஏரி நீர் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் துவங்க உள்ள நிலையில் பள்ளிகளை தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கவேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொய்வில்லாமல் தொடர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினர்கள் பேசினர்.

ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியக்குழு தலைவர் உறுதியளித்தார். கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 30 Oct 2021 8:14 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...