/* */

வந்தவாசியில் பெண்ணிடம் செயின் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

வந்தவாசியில் மூன்று இடங்களில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

வந்தவாசியில் பெண்ணிடம் செயின் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
X

பைல் படம்.

வந்தவாசி பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் மனைவி கனிமொழி, இவர் இரவு காற்றுக்காக வீட்டை திறந்து வைத்துவிட்டு வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கனிமொழி அணிந்திருந்த 3 பவுன் தாலிச் சங்கிலியை திருடிச் சென்றனர்.

இதே போல வீட்டை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த சென்னாபுரம் கிராமத்தை சேர்ந்த வடிவேலு, யுவராஜ் ஆகியோரது வீடுகளில் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 5 பவுன் நகையை திருடி சென்றுள்ளனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜானகிராமனின் வீட்டில் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றபோது அவர் சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். நேற்று நள்ளிரவில் மட்டும் மூன்று வீடுகளில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 23 May 2022 7:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...