/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல்
X

வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் 5-வது வார்டுக்கு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் 2 பேர் போட்டியிட்டனர்.

தேர்தல் அலுவலர் கே.பாஸ்கரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு சென்று பார்வையிட்டனர். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பாதுகாப்பு அறையில் ஓட்டு பெட்டியை வைத்து சீல் வைத்தனர்.

அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி, நாகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.அதேபோல் கண்ணமங்கலம் அடுத்த வாழியூர் ஊராட்சி மூன்றாம் வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது.நேற்று மாலை 5 மணி வரை 162 பேர் வாக்களித்தனர்.

போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு பரணிதரன் ஆகியோர் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டனர்.கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சாலமோன், சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 10 July 2022 7:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  2. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  3. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  4. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  5. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  6. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  7. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  8. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  9. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  10. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி