வந்தவாசி: ரூ.2,500 லஞ்சம் பெற்ற வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளர் கைது
லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளர் சின்னராஜ்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 63). இவர், வந்தவாசி காந்தி சாலையில் உள்ள வீட்டு வசதி சங்கத்தில், 1997-ம் ஆண்டு வீட்டு அடமான கடனாக ரூ.70 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு கடனை திருப்பி செலுத்திய பெருமாள், அடமான பத்திரம் மற்றும் தடையில்லா சான்று கேட்டுள்ளார். ஆனால் அதனை தராமல் அலுவலக அதிகாரிகள் அவரை அலைக்கழித்து வந்ததாக தெரிகிறது. மேலும், அடமான பத்திரம் மற்றும் தடையில்லா சான்றை வழங்க ரூ.2,500 தொகையை, அலுவலக உதவியாளர் சின்னராஜ் (53) லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில், பெருமாள் புகார் அளித்தார். அதன்போில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய 2,500 ரூபாயை பெருமாளிடம் கொடுத்து அனுப்பினர்.
இந்த பணத்தை சின்னராஜிடம், பெருமாள் கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் வாங்கிய சின்னராஜை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu